வியாழன், 9 ஜூலை, 2009

பிரம்மன்...

இறக்கை உந்திப்
பறந்தது பறவை...
உந்துவிசை படித்தான்...
பறவையின் தோற்றச்
சிறகை வடித்தான்...
விமானத்தில் பறந்தான்...

தொலைதூரப்பயணத்தில்
தொலைந்துபோய் சிதைந்தவன்...
அலைவரிசை கண்டான்...
தொலைதூரம் சென்றாலும்
தொடர்புகொண்டு அலைந்தான்...

பூகோளம் அறிந்தான்...
செயற்கைக்கோள் ஏவினான்
கம்பியில்லா தந்திமுறை
பயின்றான்...

உலகம் முழுக்க ஓடிஓடி
செய்திசொல்ல நினைத்தவன்
அலைவரிசை ஒளிபரப்பி
தொலைக்காட்சி செய்தான்...
கலைக்காட்சி களித்தான்...
கணக்குப்போட்டு குழம்பி
இணக்கமின்றித் தவித்தவன்
பிணக்குகள் இன்றி
கணக்கெழுத நினைந்தான்..
மறதி தொலைத்து
நினைவு வளர்க்க
தனி மூளை தேவையென
கணி மூளை வடித்தான்...
கணிணி கொணர்ந்தான்...

கடலுக்குள் நடந்தான்...
நிலத்தில் பறந்தான்...
வானில் நீந்தினா....
உற்பத்தி விருத்திக்கு
எந்திரம் கொணர்ந்தான்...
அடிமை உயிர்களை
விடுவித்தான்...
தந்திரங்கள் படித்து
எந்திரங்களின்
எசமானன் ஆனான்...

நிலவறைக்குள் ஒளிந்துநின்று
நிலவை ரசித்தவன்...
நிலவிற்குள் கால்பதித்து
குடியேற்றம் அமைத்தான்...

உயிரினம் உள்ள இந்த
ஒரே உலகை ஆண்டான்
தனக்கேற்ப விதித்தான் என்றாலும்
தன்னிறைவின்றி தவித்தான்...
இவன் சாதாரண மனிதன்....

ஆனால்....
குறுகிய காலமாம்
ஐம்பதே ஆண்டுகளில்
60 கோடியை
120 கோடியாக
ஆக்கிக்காட்டியவன்
மனிதனல்ல....பிரம்மன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக