சனி, 25 ஜூலை, 2009

கிரகணம்...

கிரகணம்...


ஆதனவனைவிடப்
பிரகாசமானவள் நீ..
உன்னைச் சந்திக்கும்
என் இரவின்
கண்கள் கூசுகிறது....

காணக் கொள்ளைகொள்ளும்
ஒளிப்பேழையாய்...
பேரழகாய் அழைக்கிறாய்...
கண்கள் புண்ணாகிடினும்
கண்டு நானும் திளைக்கிறேன்...

ஆதவனின்
மிருதுவான வெளித்தட்டு
உன் தேகம்...
தெறிக்கும்
ஒளிக்கற்றை
உன் சருமம்....

எந்தத்திசையில் நீ
சென்றாலும்
உன் இயல்புப்
பால்வெளியில்
உன்னையே எண்ணி
பயணிக்கிறது மனம்...

இந்த
வினோதப்பால்வெளியில்
உன்னைச்
சுற்றிச்சுற்றி வருகிறேன்
உயிருள்ள
ஒரே ஒரு கிரகமாய்...

சூரிய ஈர்ப்புவிசையைவிட
உன்
காதல் ஈர்ப்புவிசை
எத்தனை வலுவானது...

ஆதவனைப்போல்
வெடிக்காத
ஹைட்ரஜன் குண்டு
உன் மௌனம்...

மந்தவாயுக்களால்
நிரம்பிய
மந்தகாசம்
உன் முறுவல்...
மௌன நிர்வாணத்தை
மூடிமறைக்க
எத்தனிக்கிறது
ஒருசில வார்த்தைகள்
கிரணங்களாய்...

மௌனப்புன்னகை
வெடிக்கப்போவதில்லை..
என் காதலும்
முற்றுப்பெறப்போவதில்லை...
என்றோ
ஒருசில வினாடிகள்
நாம் நேரெதிராய்
சந்தித்துக்கொள்கிறோம்...
உன் பார்வை
என்மீது விழும்
உயிரற்ற
வினாடிகளில் என்
உயிருள்
கிரணம் பூக்கிறது...
கிரணம் பார்த்தால்
கண் பாதிக்கும் - ஆனால்
ஆயிரம் கோடி
சூரியன் ஒளிர்வதுபோல்
சந்திக்கும் உன்பார்வை.....
பாதிப்பது என் இதயம்...
ஒளிமங்கிப்போவது
கிரணம் ஆனால் என்
உயிர்மங்கிக்கிடக்கிறது
உன் சந்திப்பில்...
உயிரின்
உச்ச ஈர்ப்பு விசையுடன்
சில நொடிகளில்
முடிந்துபோகும்
இன்பக் கிரகணம்
உன் தீண்டல்...

இன்பமான உன்
தீண்டலில்
எல்லை மறக்கிறது
காதல்...
உன் பார்வை
இன்பமாய்க் குளிர்கிறது...
என்னுள்
சந்திரகிரகணம்...
உன் தீண்டல்
வெப்ப விளைவுகளை
விதைக்கிறது....
என்னுள்
சூரியகிரகணம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக