புதன், 29 ஜூலை, 2009

பித்து

ஒலிகளின் சத்தத்தில்
மொழி உருவானது...
கலிகாலம் பலரை
கருவருத்தது மொழியால்...

எல்லா மொழிகளுக்கும்
ஒலியே மூலம்...
நில்லாது என் கவியும்
மொழியறிவில் மீளும்...

இன்பமொழி எனதுமொழி
துன்பங்களை மறக்கடிக்கும்
அன்பகத்தில் விதைந்தமொழி
தென்னகத்தின் திகழ்தமிழே...

இனிமைச் சொல்லை உள்ளடக்கி என்
இமைவிரிக்க வைத்தவளே..
தனிமை என்னை சுடும்போதும்
உமையுன்னை நினைந்துருக...

தாய்மொழியை அறிந்தவன் நான்
தமிழ் மொழியில் திளைத்தவன் நான்
பேய்மொழி வந்து எம்மை
சிமிழுக்குள் அடைத்தாலும் - இந்த
சேய்மொழி என்றும் தமிழே
தமிழ்தானே என்றும் உயிரே..

காதலெனும் மொழியறியா
கயவனென்று சொன்னாலும்
சாதலென்னை நெருங்கிவந்து
சுயமிழக்கச் செய்தாலும்

சாகும்உயிர் நித்தம் உந்தன்
சுவாசம் பெற ஏங்குமே
வேகும் உயிர் செத்தபின்னும்
உன் மடியில் தூங்குமே...

கயவனல்ல நானுந்தன்
கவிப்பித்தன் என்றுரைப்பேன்
குயவன் போல
கவின் மணலில்
கவி வடிப்பேன்- அந்தக்
கவியில் வசிப்பேன்....

நீ தமிழ்
எனும்போதுமட்டும்
நான் கவிஞன்.

மற்ற சமயங்களில்
உன்னை நினைத்து
ஏங்கும் பித்தன்.

1 கருத்து: